இன்றைய பேசுபொருள் பெரியார்! பெரியாரின் அரசியல், எழுத்து, பேச்சு என அனைத்தும் போற்றுதலுக்கும் விமர்சனத்துக்கும் ஆளாகிறது, சில வேளைகளில் தூற்றுதலுக்கும். நுனி புல் மேய்ந்தார்போல் அவரை தெரிந்துகொண்டு இவற்றைச் செய்வதைக் காட்டிலும் அவரை உள்ளுணர்ந்து புரிந்துகொள்வதை பேராசிரியர் தொ.பரமசிவன் செய்கிறார். அவருடைய நேர்காணல்களின் தொகுப்பு பெரியாரை பகுப்பாய்வு செய்திருக்கிறது.