புதிதாய் தொ.ப வின் கருத்துக்களை படிக்க விரும்பும் நண்பர்களுக்கு உரைகல் ஒரு நல்ல தொடக்க புள்ளியாக இருக்கும். தமிழரின் மருத்துவ முறை, சித்தர் பாடல்கள், தெய்வங்களின் உணவுரிமை, வட்டார மொழிவழிக் கல்வி, கைதான மடாதிபதி பற்றியெல்லாம் பேசுகிறார். பேரனுக்கும் தாத்தாவிற்குமான நெருக்கத்தைப் பேசுகிறார். உலகமயமாக்கலின் விளைவுகளை விளக்குகிறார். எளிமையான நடை கொண்ட நூல். - ரகுநாதசேதுபதி